Thursday 3 September 2015

அகதி


மனித குழந்தையாய்  கூட  வாழ 
உலகத்திலும் தகுதியில்லை
மீனாய் வாழ கடலிலும் 
தகுதியில்லை ஒதுக்கபட்டான் கரை 
முன்றாம் உலகத்தை 
நோக்கிசென்றுள்ளான்; 
மனிதன் ரத்ததால்தான் 
இவ்வுலைகை நிராப்புவான் -என்பதை 
உணர்த்த தன் உடலை மட்டும் 
விட்டு சென்றான் சாட்சிக்காக .

எழுத்துப்பிழையின் உரிமை
AR

Thursday 7 May 2015

பழனி பாபா


நீ என்ன செய்தாய் தவறேதுமில்லை
அநியாயத்திற்கு எதிராய் சீறினாய்
அரசியலை உரக்க மொழிந்தாய் - அறவழி
போர்புரிந்தாய் உனக்கு பின்னால் வந்த
கூட்டம் உன் வழியில் உன்
பெயரை சொல்ல நடுங்குகிறது - உன்னை
இகழாமல் விட்டதற்க்கு நன்றி சொல் .

புலி


இங்கே நீதமேன்றால் புலி தோலை
போர்த்திய நடிகனுக்கும் - விதியில்
உறங்கிய பாமரனுக்கும் நடக்கும்
வேற்று போராட்டமே - தோற்க
பிறந்தவன் பாமரன் இங்கே தோற்க
இறந்தான் .

Wednesday 6 May 2015

பூகம்பம்


தாயும் தாய்நாடும் சொர்க்கத்தை விட
மேலானதாம் அந்நாட்டில் - உண்மைதான்
தாயின் பாதத்தில்தான் சொர்க்கம் இருக்கு
ஆனால் தாய்நாடோ இல்லவே இல்லை
இடற்பாடுக்குள் சிக்கிகொண்டது

Tuesday 5 May 2015

கற்பு களவானி


தாலியேன்றும் பெண்பொருள்
அவள் கட்டாது தவிரேல்
களங்கம் கட்டப்படும் என்றால்
தாலியானியா கணவா நீ
கற்பு களவானியே ...